← முகப்பு செய்திகள்

யாழில் பொலிஸார் துரத்தி வந்த மோட்டார் சைக்கிள் வீதியில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 18 பார்வைகள்
யாழில் பொலிஸார் துரத்தி வந்த மோட்டார் சைக்கிள் வீதியில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது
யாழில் மோட்டார் சைக்கிள்கள் விபத்து ; ஒருவர் காயம்

யாழில் பொலிஸார் துரத்தி வந்த மோட்டார் சைக்கிள் வீதியில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

ஞாயிற்றுக்கிழமை (31) யாழ்ப்பாணம் பொலிஸார் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை பொலிஸார் துரத்தி வந்தனர். இதன்போது யாழ்ப்பாணம் மவுண்ட் ஹாமல் சந்தியடியில், பொலிஸார் துரத்தி வந்த மோட்டார் சைக்கிளானது வேறொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதன்போது மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார். பின்னர் துரத்தி வந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net