மட்டக்களப்பு விடுதியில் தீ விபத்து – சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு நகரிலுள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று (27) பிற்பகல் ஏற்பட்ட இந்த தீப்பரவலின்போது வெளியான நச்சுப் புகையால், அறையில் தங்கியிருந்த 3 வயது ஆண் குழந்தையும் 5 வயது பெண் குழந்தையும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
உயிரிழந்த குழந்தைகள், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தாயை பார்வையிடுவதற்காக தந்தையுடன் பதுளையிலிருந்து மட்டக்களப்பிற்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் குழந்தைகளை அறையில் தங்கவைத்து தந்தை வெளியே சென்றிருந்த நிலையில், விடுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.