← முகப்பு தமிழ்

ஜூன் மாதத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (09) கூடவுள்ளது. சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன

🕐 09 Jun 2026 📂 தமிழ் 6 பார்வைகள்

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று முற்பகல் 09.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், இன்றைய தினம் முத்திரை தீர்வை விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழுள்ள கட்டளை, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்திச் சட்டத்தின் கீழுள்ள கட்டளை ஆகியவற்றுக்கு அங்கீகாரம் பெறப்படவுள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக, உற்பத்தி தீர்வை விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழுள்ள கட்டளை, பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழான கட்டளை மற்றும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் கீழுள்ள தீர்மானம் ஆகியன இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், பொதுச் சேவை பாதுகாப்புச் சட்டத்தின் கீழான தீர்மான விவாதத்தின் பின்னர் அங்கீகரிக்கப்படவும் உள்ளது.

நாளை தொலைத்தொடர்பு அறவீடு திருத்த சட்டமூலம் மற்றும் நிதி திருத்த சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், அதற்கு அடுத்த நாள் மத்தியஸ்த சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு, குற்றவியல் கருமங்களில் பரஸ்பரம் உதவியளித்தல் சட்டத்தின் கீழான கட்டளை என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

வெள்ளிக்கிழமை, இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள் மற்றும் 20 பில்லியன் ரூபா மேலதிக மதிப்பீடு ஆகியன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர், அவற்றுக்கு அங்கீகாரம் வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலுடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில்
09 Jun 2026
📰
தமிழ்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, இதுவரை உணவோ அல்லது
8 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவுக்கு ஆ
8 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகும்
9 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதி நடைபெறும்
9 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
எத்தியோப்பியாவில் கடத்தப்பட்டிருந்த மூன்று இலங்கையர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்புகளுக்காக எ
10 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net