← முகப்பு தலையங்கம்

இந்தக் கொடுமையிலிருந்து மீண்ட ஜோ வாட்ஸ், தற்போது இதேபோன்ற பாதிப்புக்குள்ளான பிற பெண்களுக்கு உதவ #EndEyeCheck

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 தலையங்கம் 76 பார்வைகள்
இந்தக் கொடுமையிலிருந்து மீண்ட ஜோ வாட்ஸ், தற்போது இதேபோன்ற பாதிப்புக்குள்ளான பிற பெண்களுக்கு உதவ #EndEyeCheck

இந்தக் கொடுமையிலிருந்து மீண்ட ஜோ வாட்ஸ், தற்போது இதேபோன்ற பாதிப்புக்குள்ளான பிற பெண்களுக்கு உதவ #EndEyeCheck என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.

பிரித்தானியா – டெவோனைச் சேர்ந்த 43 வயதுடைய ஜோ வாட்ஸ் (Zoe Watts) என்ற பெண், தனது கணவனால் பல ஆண்டுகளாக போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.

18 ஆண்டுகால உறவில் இருந்த அவரது கணவர், இரவில் அவரது தேநீரில் தூக்க மாத்திரைகளை கலந்துகொடுத்து, அவர் மயக்கத்தில் இருந்தபோது அவரை வன்கொடுமை செய்ததோடு, அதைப் புகைப்படமாகவும் வீடியோவாகவும் எடுத்துள்ளார்.

2011 முதல் 2016 வரையிலான 06 ஆண்டுகளில் இந்தக் குற்றங்கள் நடந்துள்ளன. ஒரு ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்திலிருந்து திரும்பிய பிறகு, தனது கணவர் தனக்குத் தெரியாமல் தேநீரில் மருந்து கலந்து வன்கொடுமை செய்ததை ஜோவிடம் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவரது கணவருக்கு 2022 ஆம் ஆண்டில் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மயக்க நிலையில் இருந்ததால் தனக்கு நேர்ந்தது வன்கொடுமை என்பதைத் தொடக்கத்தில் உணரவில்லை என்றும், பொலிஸார் விளக்கிய பின்னரே அதைத் தான் புரிந்துகொண்டதாகவும் ஜோ குறிப்பிட்டார்.

இந்தக் கொடுமையிலிருந்து மீண்ட ஜோ வாட்ஸ், தற்போது இதேபோன்ற பாதிப்புக்குள்ளான பிற பெண்களுக்கு உதவ#EndEyeCheck என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.

போதை மருந்து மூலம் செய்யப்படும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கவும், மயக்க நிலையில் இருக்கும் பெண்களைத் துன்புறுத்தும் வீடியோக்களை இணையத்தில் பரப்புவதற்கு எதிராகவும் கடுமையான சட்டங்களைக் கொண்டுவர இந்தப் பிரச்சாரம் வலியுறுத்துகிறது.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம் இதுவரை 22 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் தங்களது பாதிப்புகளை ஜோவிடம் பகிர்ந்துள்ளனர்.

அறிமுகமில்லாத நபர்கள் மட்டுமல்லாமல், நம்பிக்கைக்குரிய நெருக்கமானவர்களாலும் இத்தகைய 'உள்நாட்டு போதை மருந்து கலப்பு' (domestic spiking) நிகழலாம் என்பதை ஜோ எச்சரிக்கிறார். பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி பொலிஸ் மற்றும் மருத்துவ உதவியை நாடுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்
தலையங்கம்
உயிரிழந்தவர், கிளிநொச்சி நகரைச் சேர்ந்த 23 வயதுடைய சிவகுருநாதன் சாரங்கன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
09 Jun 2026
தலையங்கம்
“எந்தவொரு முதலமைச்சராவது இவ்வளவு எளிமையாக இருப்பார்களா?” என்று கேட்டால், “நிச்சயமாக இருக்க மாட்டார்கள்” என்பது
53 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உக்ரைனியப் படைகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 600
2 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நடுவராகப் பங்கேற்க அமெரிக்கா அனுமதி மறுத்ததை அடுத்து, சோமாலியாவின் சிறந்த
4 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே வெண்ணாற்றங்கரை சுண்ணாம்பு காலத்தெரு பகுதியில் வசித்து வரும் காட்டுநாயக்க
4 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
அதிமுக-வின் சீனியர் விக்கெட்டுகளான சி.வி.சண்முகமும், விஜயபாஸ்கரும் ஏன் இன்னும் தவெக-வில் ஐக்கியமாகவில்லை என்பத
6 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
அவசரகால சட்டத்தை நீடிக்கும் தீர்மானம் 128 மேலதிக வாக்குகளால் இன்ற
தமிழ் · 09 Jun 2026
2
உயிரிழந்தவர், கிளிநொச்சி நகரைச் சேர்ந்த 23 வயதுடைய சிவகுருநாதன் ச
3
சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு
4
வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் 'ரீல்ஸ்' (Reels
5
ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெ
தமிழ் · 09 Jun 2026
6
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர
7
மலையக பகுதிகளில் உள்ள மீண்டும் புனரமைக்க முடியாத வீடுகளுக்கு 50 இ
தமிழ் · 09 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net