← முகப்பு செய்திகள்

அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுமுல்லவத்த, திட்டகல்ல பகுதியில் வயல்வெளி ஒன்றில் இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கி

🕐 1 மணி நேரம் முன்னர் 📂 செய்திகள் 4 பார்வைகள்
அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுமுல்லவத்த, திட்டகல்ல பகுதியில் வயல்வெளி ஒன்றில் இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கி
அஹங்கமவில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இளைஞர்

அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுமுல்லவத்த, திட்டகல்ல பகுதியில் வயல்வெளி ஒன்றில் இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை (08) மாலை, பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் திட்டகல்ல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் தனது வயலில் வேலை செய்துவிட்டு, மீண்டும் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த போதே இவ்வாறு வயல்வெளியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net