சாவகச்சேரி நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய இருவர் மீள கைது

by admin

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய கைதிகள் சுமார் 30 நிமிட இடைவெளியில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திருட்டு குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவரும் , விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரும் , வழக்கொன்றுக்காக யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து , சாவகச்சேரி நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர். 

அவர்களை சுமார் 30 நிமிட இடைவேளையில் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். 

அதனை அடுத்து , தப்பியோடிய இருவருக்கு தலா 6 மாத கால சிறைத்தண்டனை விதித்த சாவகச்சேரி நீதவான் , ஆயிரத்து 500 ரூபாய் தண்டமும் விதித்தார். தண்ட பணத்தினை கட்ட தவறின் மேலும் ஒரு மாத சாதாரண சிறைத்தண்டனை அனுவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். 

தொடர்புடைய செய்திகள்